ஈரோடு, ஜூலை 4 –
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம் 2 ந் தேதி தொடங்கியது. இன்று வரை 3 நாட்கள் இந்த ஹோமம் நடந்தது. விஸ்வரூப தரிசனத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மகா சுதர்சன ஹோமம் தீபாராதனை போன்றவைகளும் நடைபெற்றன. இதன் பிறகு கும்ப ஆராதனை, சுதர்சன ஹோமம், பூர்த்தி கலச புறப்பாடு, வீர ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. வழக்குகளில் வெற்றி பெறவும் நீண்ட ஆயுள் கிடைக்கவும் நினைத்தது நிறைவேறவும் நோய்கள் நீங்கவும் எதிரிகளின் சூழ்ச்சி சதித்திட்டங்களில் இருந்து காக்கவும் வறுமை ஒழியவும் இந்த சுதர்சன ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.