ஈரோடு, மே 11 –
நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் புஷ்பாஞ்சலி ஐயப்பா சபரிமலை சேவா அறக்கட்டளை மற்றும் ஐ பவுண்டேஷன் ஆகியவற்றின் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஈரோடு வைராபாளையம் சமுதாய கூடத்தில் நடந்தது.
சளி மற்றும் காய்ச்சல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய மருத்துவம், ஆஸ்துமா, பக்கவாதம், தலைவலி, அஜீரணக் கோளாறுகள், விரை வீக்கம், கண் சிகிச்சை மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சுமார் 200 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முகாமில் ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ரவி பாஞ்சாலி சேவா மாநில தலைவர் சீனிவாச கதிர் மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலர் சண்முகம் ஆகியோர் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புஷ்பாஞ்சலி சேவா டிரஸ்ட் ஈரோடு மாவட்ட தலைவர் செந்தில் குமார் செய்திருந்தார். முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ரவி சங்கர் அருண் குமார் ஸ்ரீதர் மற்றும் கணேசன் உதயகுமார் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நந்தா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் நிர்மல் ராஜ் நன்றி கூறினார்.



