கொட்டாரம் டிச 7
கொட்டாரம் நகர அம்பேத்கர் மன்றம் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் கொட்டாரம் சந்திப்பில் அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் மன்ற தலைவர் கார்த்திக் குமார் தலைமை வகித்தார்.
கொட்டாரம் பேரூர் திமுக செயலாளர் வைகுண்ட பெருமாள்,அதிமுக பேரூர் செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதில், அதிமுக ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் வக்கீல் ராஜேஷ், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், கவுன்சிலர் தங்ககுமார், திமுக நிர்வாகி மரியநேசன், ஹேமந்த் குமார்,ரெஜி, குலசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.



