By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி
திண்டுக்கல்

அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி

Last updated: July 3, 2025 7:38 pm
July 3, 2025 4 Views
Share
SHARE

நிலக்கோட்டை, ஜூலை 3 –

நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் ஒரு கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடன் வாங்காத நபர்களுக்கு கடனை செலுத்த கோரி வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிவஞானபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டுறவு வங்கியில் சிவஞானபுரம், கூட்டாத்து அய்யம்பாளையம், சி. புதூர், போடியகவுண்டன்பட்டி, குல்லிசெட்டிபட்டி மற்றும் கு. லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள், சிறு மற்றும் குறுந்தொழில் கடன், வணிக கடன், விவசாய கடன், நகை கடன், கால்நடை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 31.3.2015-ல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களின் 100 நாள் வேலைக்காக கொடுக்கப்பட்ட ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ஒவ்வொரு நபர்களும் ரூபாய் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சிறு தொழில் கடன் பெற்றதாக கூறி தற்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு தாங்கள் வாங்கிய கடன், வட்டியும் அசலும் சேர்த்து ரூபாய் 27 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நோட்டீஸ் பெறப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் தாங்கள் வாங்காத கடனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு செலுத்த சொல்வதா? எனக்கூறி கூட்டுறவு வங்கிக்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவஞானபுரத்தைச் சேர்ந்த 25 நபர்கள் சுமார் 150 பவுன் வரை அடகு வைத்து நகை கடன் பெற்றுள்ளனர். இதில் நகை கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நகை கடன் பெற்றவர்களுக்கு நகையை வழங்காமல் உங்களுடைய நகைகள் ஏலம் போய்விட்டதாக கூறி கூட்டுறவு வங்கி நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நீங்கள் நகை கடன் பெற்ற நகைகளை ஏலம் விடப் போவதாக எந்த ஒரு நோட்டீஸும் அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுபோன்று சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறாத நபர்கள் பெயரில் விவசாய கடன், சிறு குறு தொழில் கடன், கால்நடை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் பெற்றதாக மெகா மோசடியில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. அதேபோல், சுமார் 150 பவுன் அடகு வைத்த 25 நபர்களின் நகைகளை தமிழக அரசு தள்ளுபடி செய்த பிறகும் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்காமல் வங்கி நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

தாங்கள் அடகு வைத்த நகைகளை திருப்ப முடியாமல் ஏலம் போய்விட்டதே என நினைத்து மன உளைச்சலாலும் குடும்ப பிரச்சினையாலும் இருந்த இக்கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வம், ராம்குமார், ராமு ஆகிய 3 நபர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் ஒரு கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த வங்கி மோசடி குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டுறவு வங்கி நிர்வாகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த வங்கியில் ஏற்பட்ட மோசடி சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You Might Also Like

கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்

ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டும் பணிதல பொறுப்பாளர்களை மாற்றக் கோரியும் பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்

திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் சார்பாக 2ம் ஆண்டு ஆண்கள் ஐவர் ஒருநாள் ஹாக்கி போட்டி

நிலக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன

திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக தலைமைச் செயற்குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

விஜயகாந்த்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

December 31, 2024 27 Views
5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
திருவோணத்தை முன்னிட்டு சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!
குமரி கடற்கரையில் சிலை போல் நின்ற வாலிபர்
விதிமுறைகளை மீறி மினி பஸ் வழித்தடங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?