நித்திரவிளை, ஜூலை 2 –
நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு கும்பலாக உட்கார்ந்து மது அருந்துவதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று பொது இடத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சர்ச்சில் (26), நிதின் (25), கிறிஸ்டின் (29), பிபின் (26), ஸ்டீவ் டொனோ (27), ரிஜோ (26) ஆகிய வாலிபர்களை குழித்துறை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.