மார்த்தாண்டம், ஜூன் 30 –
குலசேகரம் அருகே மண்டலாச்சி கோணம் பகுதி சேர்ந்தவர் அஜித் (37) டிரைவர். இவர் மனைவி சோனியா (32). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 26 ஆம் தேதி வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்ற சோனியா பின்னர் வீடு திரும்பவில்லை. கணவர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சோனியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அஜின் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.