By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்
கனஂனியாகுமரி

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்

Last updated: June 30, 2025 10:29 am
June 30, 2025 16 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 30 –

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தனிநபர் ஆதாயத்திற்காக சிறு வியாபாரிகளை வஞ்சிக்கும் மீன்வளத்துறையின் செயல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல துவங்கியிருக்கின்றனர். இந்த தொழிலை மையப்படுத்திய மக்கள் புழக்கத்தை நம்பி மீன்பிடி துறைமுகத்தை சுற்றி சிறு வணிகர்களால், தேநீர் கடைகள், கடலுக்கு செல்லும் மீனவர்களின் தேவைக்கான தண்ணீர் போத்தல்கள், தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் சமையலுக்கு தேவையான பொருள்களை விற்பதற்காக பாதையோர கடைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்தமுறை மீன்வளத்துறையால் தனிநபர் ஒருவருக்கு சிற்றுண்டிக்கடை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டதோடு மற்ற சிறு வியாபாரிகள் அனைவரும் அந்த சிற்றுண்டிக்கடையின் முன்பு அமர்ந்து மட்டும் தான் வியாபாரம் செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும் அந்த இடத்தில் பெண்களுக்கு மட்டும் தான் வியாபாரம் செய்ய அனுமதி எனவும் ஆண்கள் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அலுவல் பூர்வமான அரசு உத்தரவா அல்லது தனிநபரின் சுய லாபத்திற்காக அறிவிக்கப்பட்ட வெறும் வாய்மொழி உத்தரவா என்பது தெரியாத நிலை உள்ளது.

மாலை முதல் அதிகாலை வரை நடக்கும் இந்த வியாபாரத்தில் பெண்கள் ஈடுபடுவதற்கு தயக்கமாகவும் அசௌகரியமாகவும் உணர்வதாக தங்கள் கவலைகளை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருக்கின்றனர்.

மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அமர்ந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பால் அவர்களது விற்பனை பாதிக்கப்படுவதோடு அப்பகுதியில் அவர்களுக்கு தேவையான கழிவறை வசதிகளோ பாதுகாப்பு வசதிகளோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து மீன்வளத்துறையின் மக்கள் விரோத உத்தரவை ரத்து செய்து சிறு வியாபாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை

கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; குமரியில் போதகர் போக்சோ சட்டத்தில் கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்வேலூர்

அருள்மிகு தர்மராஜா திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

August 29, 2024 35 Views
நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
சேனூரில் திமுக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா
முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி
ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் பௌர்ணமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?