சென்னை, ஜூன் 26 –
கே.கே.வி குழுமம் 1962 ஆம் ஆண்டு குழந்தையப்ப முதலியார் மற்றும் வேலு ஆகியோரால் ஒரு சிறிய ஜவுளிக்கடையாக மதுரையில் தொடங்கப்பட்டது. தாய் நிறுவனம் கே.கே.வி யின் கிளை நிறுவனமான “தி சென்னை சில்க்ஸ்” என்ற சில்லறை வர்த்தக நிறுவனம் இன்று தமிழகம் முழுவதும் இயங்கி வருகிறது. தூய்மையான எரிசக்தி பிரிவை கே.கே.வி ஆக்ரோ பவர்ஸ் லிமிடெட் வழி நடத்துகிறது. இது தமிழ்நாடு முழுவதும் 29.6 மெகாவாட் புதிப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனை கொண்டுள்ளது. கே.கே.வி ஆக்ரோ பவர்ஸின் வலுவான நிதி அடித்தளம் இந்த குழுமத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது .
கே.கே.வி.நிறுவனம் கடன் இல்லாத நிலையில் 2024-25 நிதியாண்டில் ரூ. 1.69 கோடி நிகர லாபம் மற்றும் ஒரு பங்குக்கு ரூபாய் 29.28 வருவாய் என கடந்த மூன்று ஆண்டுகளில் பங்கின் மதிப்பு ரூ.500க்கும் மேலாக மிக உயர்ந்த வளர்ச்சி பெற்றுள்ளது. கே.கே.வி ஆக்ரோ பவர் லிமிடெட் தனது தூய்மையான எரிசக்தி குழுவின் மூலம் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களுடன் கூட்டாண்மையில் ஈடுபடுகிறது.
கே.கே.வி குழுமத்தின் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டி.கே.சந்திரன் கூறுகையில்: இந்த மூலோபாய முயற்சிகள் கே.கே.வி குழுமத்தின் வளர்ச்சியினை நிலைநிறுத்துவதோடு மேலதிக வளர்ச்சியை உருவாக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றன. ஆகவே நிறுவன இலாபத்தில் டிவிடென்ட் என்னும் ஈவுத்தொகையை முறையாக வழங்கி பங்குதாரர்களின் நம்பிக்கை மதிப்பை கூட்டுகிறது. மின்சார வாகனம் கூட்டுறவுகளுக்கு கூடுதலாக கே.கே.வி குழுமம் சந்தைப்படுத்தல் சேவைகளுக்குள் நுழைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய பிரிவு ஆற்றல்மிக்க இளம் குழுவால் வழி நடத்தப்படும். இது வாடிக்கையாளர் ஈடுபாட்டிலும் புதிய அணுகுமுறைகளை கொண்டு வரும் என்று தெரிவித்தார்.