சிவகங்கை, ஜூன் 23 –
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ வான பி.ஆர்.குணசேகரன் தலைமையில் அதிமுக ஆதரவாளர்கள் திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக இருக்கும் டி.ஆர்.பி.ராஜா என்பவர் எக்ஸ் சமூக வலைதளத்தில்
முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் கட்சிக் கொடியையும் கேலி செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார். இதனை கண்டித்து சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி .ஆர். செந்தில்நாதன் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து சிவகங்கை போலீஸ் எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கட்சியின் சார்பில் அவர் கூறியிருந்ததாவது: முன்னாள் முதல்வரின் கண்ணியத்தையும் மாண்பையும் சீர்குலைக்கும் வகையில் திமுகவில் தொழில் நுட்பப் பிரிவில் செயலாளராக இருக்கும் டி.ஆர்.பி. ராஜா கீழ்த்தரமான கேலிச் சித்திரத்தை வெளியிட்டுள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டும் வகையிலும் மனதை புண்படுத்தும் வகையிலும் கட்சிகளுக்கு இடையே மோதலை தூண்டும் வகையிலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் வகையிலும் இது
அமைந்துள்ளது. எனவே ராஜா மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஒன்றியச் செயலாளர்கள் கோபி, ஸ்டீபன் அருள்சாமி, வழக்கறிஞர்கள் துரைப்பாண்டி, குரு.தங்கபாண்டியன், அம்மா பேரவையின் சார்பில் இளங்கோவன், தமிழ்செல்வம் உள்பட கட்சியின் நிர்வாகிகள் உடன் வந்தனர் .