தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தொண்டர்களின் சார்பிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அவ்வகையில் சூலூர் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சூலூரின் அனைத்து வார்டு பகுதி நிர்வாகிகள் சார்பில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் கழக கொடி ஏற்றி திருவுருவப்படத்திற்கு மலர் மரியாதை செய்யப்பட்டது. கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பேரணியாக சென்று சூலூர் அண்ணா சீரணி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்தம் திரு உருவப் படத்துக்கு சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் தலைமையில் நகர செயலாளர் கௌதமன் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பசுமை நிழல் விஜயகுமார், முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு கலைஞரின் 102 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். பிறந்தநாள் நினைவாக பொது மக்களுக்கு பத்து ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.



