ராமநாதபுரம், ஜுன் 4-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் நகராட்சி சேர்மன் கார்மேகம் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் முன்னிட்டு பல்வேறு இடங்களில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி ஒவ்வொரு வாடா சென்று பிறந்தநாள் நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடினார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு நகராட்சி சேர்மன் வடக்கு நகர் செயலாளர் கார்மேகம் மாலை அணிவித்து, அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன் கருணாநிதி உருவப்படத்திற்கு திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வடக்கு நகர் அவைத்தலைவர் சைபுதீன், கவுன்சிலர்கள் காயத்ரி, செல்வராணி, காளிதாஸ், வீரசேகர், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதீப் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப் படத்திற்கு திமுக கவுன்சிலர் காயத்ரி தலைமையில் கவுன்சிலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அப்பகுதி மக்களுக்கு நகர்மன்றத்தலைவர் கார்மேகம் திமுக மகளிரணி கவுன்சிலர்கள் சார்பில் கவுன்சிலர் காயத்ரி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்கினார்.
ராமநாதபுரம் நகராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics