ராமநாதபுரம், செப். 01 –
இராமநாதபுரம் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கமுதி அருகே கொல்லங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா 27 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் உறவினர்களின் அனுமதியுடன் பெறப்பட்டது. தமிழக அரசு வழிகாட்டல் படி உறுப்பு மாற்று ஆணையம் அறிவுறுத்திய பட்டியல் அடிப்படையில் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் இருப்போருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த உடல் உள்ளுறுப்பு தான அறுவை சிகிச்சை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன், எஸ்பி சந்தீஷ் உறுதுணையுடன் முதல்வர் அமுதா ராணி வழிகாட்டல்படி மயக்க மருத்துவ பிரிவு இணை பேராசிரியர் சுகுமார், பரணிதரன் (நரம்பியல் அறுவை சிகிச்சை) நிபுணர் தலைமையில் டாக்டர் அறிவழகன் (சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை), அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் சரவணன் அடங்கிய மருத்துவ குழுவினருடன் வெற்றிகரமாக
முதல் முறையாக செயல்படுத்தப்பட்டது.
டிரான்ஸ்டன் ஒருங்கிணைப்பாளர் வினோத் உறுதுணையாக இருந்தார். மருத்துவ கண்காணிப்பாளர் ஜவஹர், இணை மருத்துவ கண்காணிப்பாளர் ஞானக்குமார், நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் மற்றும் அனைத்து துறை மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் இந்த உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் மரியாதை செலுத்தி வழங்கப்பட்டது.



