புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சியாக மதுரை அப்போலோ கேன்சர் சென்டர், வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை தொடங்கியுள்ளது
மதுரை, ஜூன் 04: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாய்புற்று நோயை ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புகையிலை பயன்பாட்டின் உடல்நல பாதிப்புகளையும் அதன் தாக்கத்தையும் எடுத்துரைக்கும் பிரச்சாரத்தை அப்போலோ மருத்துவமனை முன்வைக்கிறது. மதுரை அப்போலோ கேன்சர் சென்டர், புகையிலை பயன்பாட்டினால் இந்தியாவில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், ஒரு சிறப்பு வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை தொடங்கியுள்ளது. உலகளவில் வாய் புற்றுநோயினால் பாதிக்கபடுவோரில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் இருக்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் 77,000 புதிய பாதிப்புகளும், 52,000 இறப்புகளும் பதிவாகின்றன. அதே சமயம் தாமதமான நோய் கண்டறிதல் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், உயிர் பிழைக்கும் விகிதம் 50%க்கும் குறைவாக உள்ளது.
மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கே. பாலு மகேந்திரா மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது, “புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 6 முதல் 7 மடங்கு அதிகம். வழக்கமான ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வாய் பரிசோதனைகள் மூலம் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்ற முடியும்”
மதுரை அப்போலோ மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மற்றும் எண்டோஸ்கோபிக் ஸ்கல் பேஸ் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். பி. மீனா பிரியதர்ஷினி மற்றும் டாக்டர். ஜி. அருண் பிரபு கணேசன் ஆகியோர் வலியுறுத்தியதாவது, “கன்னத்தின் உட்புற சவ்வு மற்றும் நாக்கு ஆகியவை இந்த புற்றுநோயினால் பொதுவாக பாதிக்கப்படும் பகுதிகள் ஆகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதன் அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன, குறிப்பாக இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் இருக்கும் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எங்களின் இந்த திட்டத்தில் மூலம் சரியான நேரத்தில் சரியான பரிசோதனை மேற்கொண்டு அவர்களை நோயில் இருந்து காக்க முடியும் .”
அப்போலோ மருத்துவமனைகளின், தலைமை இயக்க அதிகாரி டாக்டர். நிகில் திவாரி மேலும் கூறியதாவது, இந்த பரிசோதனையை எளிதில் அணுகக்கூடியதாகவும் குறைந்த விலையிலும் செய்ய, அப்போலோ கேன்சர் சென்டர் வெறும் ரூபாய் 499க்கு வழங்குகிறது, இதில் சிறப்பு புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்களால் விரிவான வாய்வழி பரிசோதனையும் அடங்கும். கூடுதலாக, இந்த பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படும் உள்நோயாளிகள் குறைந்த விலையில் சிகிச்சை பெறுவார்கள்.
அப்போலோ மருத்துவமனை, மதுரை மண்டலத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். நிகில் திவாரி, மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் K. பிரவீன் ராஜன், புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். K. பாலு மகேந்திரா, கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜி. சதீஷ் சீனிவாசன், காது மூக்கு தொண்டை மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் டாக்டர். P. மீனா பிரியதர்ஷினி, டாக்டர்.G.அருண் பிரபு கணேசன், நிர்வாக துணை பொது மேலாளர் லாவண்யா மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த மேலாளர் J. பிரேம் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.