நாகர்கோவில் ஜூன் 1
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு பார்வையற்றோர் கைப்பந்து சங்கம் சார்பில் நேற்று சுங்கான்கடை சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மைதானத்தில் முதல் முறையாக மாவாட்டா அளவில் பார்வைக்குன்றியோருக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி,தேனி,திருநெல்வேலி,தூத்துக்குடி,தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்,பெண் வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியினை நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா துவக்கிவைத்தார் உடன்தமிழ்நாடு பார்வையற்றோர் வாலிபால் சங்கம் பொதுச்செயலாளர் பழனிசாமி,சமூகசேவகர்,டாக்டர் டார்வின் மோசஸ்,
டாக்டர்.அழகேசன்,காமராஜர் கல்வியியல் கல்லூரி
முதல்வர்.சதீஷ்குமார், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் டாக்டர்
வெங்கடேஷ், மேலாளர், குமரி குயின்ஸ்
ஜே.சகாயாஎமர்லின்,
செயின்ட் சேவியர் கத்தோலிக்கபொறியியல்கல்லூரி,இயக்குனர் ஜோஷிலா ஆகியோர் முன்னிலையில் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெறும் அணிகள் லீக் முறைப்படி பாரா ஒலிம்பிக் போட்டியில் தேர்வு செய்யப்படுவர்.
அந்த வகையில் நடந்த போட்டியில் கண் பார்வை குன்றியோர் விளையாடினர்,இந்த விளையாட்டு அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பார்வையற்றோர் கைப்பந்து சங்கத்தின் பொதுச்செயலாளர்.பழனிச்சாமி கூறுகையில்”இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் தங்களை உற்சாகமடைய செய்கிறது குறிக்கோள் உடன் விளையாடும் தன்மை இது போன்ற போட்டிகளில் உருவாகிறது,மேலும் ஆர்வமுடன் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் விளையாட முன் வருகின்றனர் என தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு(பார்வை குறைப்பாடு உள்ள வீரர்களுக்கு) பயிற்சி மேற்கொள்ள தனியார் மைதானங்களை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது அதற்கு பணம் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால்,அதிகமானோர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பதால் பொருளாதார சிக்கல் உள்ளது,எனவே தமிழக அரசு தங்களுக்கு பிரத்யோகமான மைதானங்களை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை தேனி மாவட்டமும், இரண்டாம் பரிசை திருநெல்வேலியும் பெற்றது. அதேபோல் பெண்கள் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதல் பரிசையும், தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாம் பரிசையும் வென்றனர். வெற்றியாளர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக நாகர்கோவில் மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் பரிசு வழங்கி கௌரவித்தார்.