தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு, உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுநர்கள் என 20 பேருக்கு பரிசுகள், கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மொத்தம் 476 பயனாளிகளுக்கு ரூ.7.61 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கள் வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எ. வ. வேலு கூறியதாவது. சாலை விதிகளை பின்பற்றாதாலும், கவனக்குறைவாலும் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் நிரந்தர மற்றும் பகுதி உறுப்புகள் செயலிழப்புகள் போன்றவை ஏற்படுகிறது. சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் விபத்துக்கள் குறைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை கட்டமைப்பு, சாலைகள் சீரமைத்தல், நடைபாதை அமைத்தல், சர்வீஸ் சாலை அமைத்தால், விபத்து பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தை விபத்தில மாவட்டமாக மாற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் பேசினார். தருமபுரி – பாப்பாரப்பட்டி இடையே 4 வழி சாலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் எ.வ வேலு, எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர் கலாய்வு மேற்கொண்டனர். சாலை யோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பன்னீர்செல்வம், எஸ். பி. மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, டிஆர்ஓ கவிதா, கோட்ட பொறியாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட் டான் மாது, ஆர்டிஓ க்கள் காயத்ரி, சின்னசாமி மற்றும் அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை



