கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் தயார்நிலை குறித்து வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, மாவட்ட வன அலுவலர் .பகான் ஜெகதீஷ் சுதாகர் ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் .ஷாஜகான், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மைத் துறை) .ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



