சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குலசேகரமங்கலம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆண்டி நாடானூர் கிராமத்தில் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 4.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதி நேர நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுப் பணி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய நியாய விலை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பட்டாடை கட்டி பஞ்சாயத்து தலைவர் சுமதி கனகவேல், ஒன்றிய துணைச் செயலாளர் வினுசக்கரவர்த்தி, கிளைச் செயலாளர்கள் செல்லப்பா, மணி, சார்லஸ்,கடற்கரைபாண்டி, ராக்கையா, ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி, ஒன்றிய பொருளாளர் பண்டாரக்கண்ணு ஒன்றிய பிரதிநிதி சேவியர், பாக முகவர் ராஜேந்திரன், வர்த்தக அணி மகேஷ், நவமணி, பாலாஜி மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



