தென்காசி மே:24
தென்காசி மாவட்டம் சிந்தாமணியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் ரிப்பன் வெட்டி சிறந்து வைத்தார் திறப்பு விழாவிற்கு தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமை தாங்கினார் தண்ணீர் தொட்டி திறப்பு விழாவில் 31வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் முருகன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், நகரப் பொருளாளர் ஈஸ்வரன், நகர் மன்ற உறுப்பினர் ரஃபீக், வட்டாரத் தலைவர் பெருமாள் மற்றும் திமுக ,காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.