அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டியானது எம். வி. முத்தையா அரசு மகளிர் கலை கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இவ்விளையாட்டு போட்டியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள எட்டு கல்லூரிகள் பங்கேற்றன. இப்போட்டிகள் 21.8.2025 மற்றும் 22.8.2025 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றறது.
இறுதிப்போட்டியில் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலை கல்லூரி முதல் இடத்தையும், அதனைத் தொடர்ந்து பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாமிடத்தையும், பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கலைக்கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றது.
எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமி, தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக துணை தலைவர் மருத்துவர் அ. சீனிவாசன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை இயக்குனர் முனைவர் ராஜம், பேராசிரியர் முனைவர் நாகநந்தினி, பேராசிரியர் முனைவர் ராஜேஸ்வரி, பேராசிரியர் முனைவர் ராஜம்மாள் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினார்கள்.



