தருமபுரி, மே 18 –
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காசநோய் பிரிவில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட காசநோய் மருத்துவ பயனாளிகள் 55 பேருக்கு தருமபுரி மண்டல கனரா வங்கி அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தை தருமபுரி மாவட்ட துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) மரு.M.பாலசுப்பிரமணியம் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
மேலும் நோயாளிகளின் குடும்பத்தில் உள்ளவர்கள் காசநோய் பரிசோதனை செய்து கொண்டு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு தடுப்பு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். சிகிச்சை காலம் முழுவதும் மாத்திரை தவறாமல் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தினார். 2030- ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தருமபுரியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று துணை இயக்குனர் கேட்டுக் கொண்டார்.



