கன்னியாகுமரி மே 30
பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச்செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பாரத நாட்டின் தென்கோடியில் அமைந்திருக்கும் கன்னியாகுமரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மண். முக்கடலும் சங்கமிக்கும் புண்ணிய பூமி இது. சுவாமி விவேகானந்தர் இங்கு வந்து தவம் செய்து, பாரதத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார்.
இந்த,புண்ணிய பூமிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் தியானம் செய்ய வருகிறார். இது குமரி மாவட்ட மக்கள் ஒவ்வொருவருமே பெருமைப்பட வேண்டிய அற்புதமான தருணம். நாட்டின் புகழை சிகாகோ மாநாட்டின் வழியாக, உலக நாடுகளிடையே நிறுவியவர் சுவாமி விவேகானந்தர்.
இன்று அதே போல், நாட்டின் புகழை தன் செயல்பாடுகளின் வழியாக நிறுவிக் கொண்டு இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அன்னை பகவதியின் பாதம் பட்ட இடம், சுவாமி விவேகானந்தர் தவம் செய்த இடம் என்னும் பெருமைகளோடு பிரதமர் மோடி தியானம் செய்த இடம் என்றும் வரலாற்று சிறப்பு இதன் மூலம் கிடைக்கும்.
பிரதமர் மோடி தற்போது உலகில் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.அவரது ஒவ்வொரு அசைவையும் சர்வதேச ஊடகங்கள் உற்று நோக்குகின்றன. இதனால் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் பெருமையும், சுவாமி விவேகானந்தர் பாரத நாட்டிற்கு செய்த அளப்பரிய பணிகளும் உலக அரங்கில் மீண்டும் பேசப்படும்.
இந்த நல்ல நோக்கத்திற்காக கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியின் வருகையை அவதூறாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் சமூக விரோதிகள் மீது காவல்துறை வழக்கு நடவடிக்கை எடுகாகாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.நீதி என்பது அனைவருக்கும் ஒன்று தான்.
பா.ஜ.வினர் மீது நொடி பொழுதில் நடவடிக்கை எடுக்கும் காவல் துறை,ஆளும் திமுக வினர் செய்யும் அவலங்களை கண்டுக்கொள்வதில்லை.பிரதமர் வருகை குறித்து அவதூறு செய்தி பரப்புவோர் மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



