காஞ்சிபுரம் மே 15
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக காஞ்சிபுரம் கிழக்கு பகுதி சார்பில் கிழக்கு பகுதி செயலாளர் பாலாஜி ஏற்பாட்டில் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் மற்றும் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மைதிலி ஆகியோர் தலைமையில் திருநாவுக்கரசு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம் மாநில எம்.ஜி. ஆர்.மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ். எஸ். ஆர். சத்யா மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வெள்ளி தேர் இழுத்து வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட நிர்வாகிகள் வள்ளிநாயகம் அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன்,
மாணவரணி செயலாளர் திலக் குமார், வர்த்தக பிரிவு செயலாளர் எம்.எம்.மதன்,
பகுதி செயலாளர் ஜெயராஜ், கோல்டு ரவி, இளைஞரணி இணைச் செயலாளர்கள் தமின் அன்சாரி, ஐ.டி.பிரிவு இணைச் செயலாளர் பி.எஸ்.சதீஷ், உட்பட மாமன்ற உறுப்பினர் வேலரசு, ஒன்றிய துணை செயலாளர் விமல் ராஜ், ஸ்டிக்கர் விஜயன்,வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.