காஞ்சிபுரம் மே 14
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 3 ஆம் நாள் உற்சவ விழாவை முன்னிட்டு தங்க கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மேலும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவான கருட சேவை உற்சவம் மூன்றாம் நாள்
கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு,வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது,
இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் மேளதாள, நாதஸ்வர வாத்தியங்கள், முழங்க,வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர, நீல பட்டு உடுத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் பாதம் தாங்கிகள் தூக்கிச் செல்ல கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் பிரகாரத்தில் வலம் வந்து நம்மாழ்வார், ராமானுஜர்,தேசிகர் சன்னதிகளில் மரியாதையை ஏற்று கொண்டு கோபுர வாசலில் எழுந்தருளிய போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் பிள்ளையார்பாளையம் பகுதியில் மாமன்ற உறுப்பினர் சண்முகானந்தம் ஏற்பாட்டில் உள்ள அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், அம்மா பேரவை செயலாளர் கே.யூ.எஸ் சோமசுந்தரம், மாநகர அம்மா பேரவை மாணிக்கம், அதிமுகவின் பாலாஜி சீனிவாசன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது.
இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று ஒப்பந்ததாரர் நடராஜன் மற்றும் சமூக அலுவலர்கள் ஏராளமானோர் வழி நெடுகிலும் சிற்றுண்டி உணவுகளை வழங்கினர்.