திருப்பூர், மே. 12
சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்றது. இதன் பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாமல்லபுரம் திருவிடந்தையில் நேற்று நடந்தது. இதில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பா.ம.க. தொண்டா்கள் பங்கேற்றனா். திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் பல தொண்டா்கள் சென்றனா். இதில் திருப்பூர் வடக்கு தொகுதியில் இருந்து மாநில துணை தலைவா் சையத் மன்சூர் உசேன் தலைமையிலும், வடக்கு தொகுதி தலைவா் பொன்னுசாமி முன்னிலையிலும் மாற்று சமூகத்தை சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றனா்.



