கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் 7 முதல் 10 நாட்கள் வரை வரவில்லை.. இதனை தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்க வேண்டும்.மாநகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.குடி நீர் தட்டுப்பாடு நிலவி வருவதை போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு சரி செய்ய வேண்டும். குடிநீர் பொது மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டில் ஒன்று, இதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.. மேலும் வலம்புரி குப்பை கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நாள் ஒன்றுக்கு இரண்டு சுற்று தான் நடைபெறுகிறது அதை மூன்று சுற்றாக மாற்றி அதிகப்படியான குப்பைகளை ஒரு நாளொன்றுக்கு குறைந்தது 1000 டன் குப்பையாது பிரித்து அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் மாநகராட்சி ஆணையாளர், பொறியாளர்களிடம் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார்கள்.. இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் மீனாதேவ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சதீஷ் , தினகரன் , ரோஸிட்டா திருமால் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics