சுசீந்திரம் மே 1
சுசீந்திரம் அருகே கரியமாணிக்கபுரம் கரிய மாணிக்கத்தாழ்வார் திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ம் ஆண்டின்படி பொதுநல நிதியின் மூலம் திருப்பணி வேலைகள் ரூ.28.30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பாபிஷேக திருப்பணிகளில் தரை தளம், பெயிண்டிங், பராமரிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதன் துவக்க விழா பூஜைகள் இன்று காலை 9.30 மணி அளவில் நடந்தது.
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் வகித்தார். இணை ஆணையர் பழனிக்குமார் முன்னிலை வகித்தார். மராமத்து பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன், 26-வது வார்டு வட்டப் பிரதிநிதி கௌதம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இது போல் வடசேரி அருகே கோதைகிராமம் பெருமாள் கோயிலில் திருப்பணிகள் அரசின் பொது நல நிதி ரூ. 32 லட்சம் செலவில் செய்யப்படுகிறது. இதன் துவக்க விழாவும் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் நடந்தது. இதில் ஸ்ரீ காரியம் கண்ணன், திமுக மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த், கிளை செயலாளர் மணிகண்டன், சுப்பையன் உட்பட பலர் பங்கேற்றனர்.