திருப்பத்தூர்:ஏப்:30
திருப்பத்தூரில் வாகன ஓட்டுனர்களுக்கு வாகனங்களில் கண்ணாடி பொருத்துவது, எல் இ டி ஒளியின் விளைவுகள்,பம்பர் குறித்த விழிப்புணர்வை வட்டார போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எலவம்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு கண்ணாடி பொறுத்துவது, எல் இ டி விளக்கு பொறுத்துவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டி வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்புடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டு பேசினார்.
மேலும் வாகனங்களை இயக்குபவர்களுக்கும், பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கத்தினை அளித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.