By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக புவி தினம்- கருத்தரங்கு மற்றும் மரம் நடுவிழா .
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > உலக புவி தினம்- கருத்தரங்கு மற்றும் மரம் நடுவிழா .
நீலகிரி

உலக புவி தினம்- கருத்தரங்கு மற்றும் மரம் நடுவிழா .

Last updated: April 27, 2025 2:39 am
April 27, 2025
51 Views
Share
SHARE

நீலகிரி. ஏப்ரல். 24

 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி உலக புவி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பூமியை அதன் வளங்களை பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடைபெறுவதுண்டு. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதாகும். இந்த நிகழ்வினை ஒட்டி கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் போஜராஜன் ,  கலந்துகொண்டு பேசும் போது மாணவர்கள் முடிந்த வரையில் தங்கள் வீட்டைச் சுற்றி பசுமை பரப்பினை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டார். கோத்தகிரி அரிமா சங்கத்தின் தலைவர்  ராமச்சந்திர ரெட்டி வாழ்த்துரை வழங்கினார். காலநிலை மீட்டெடுப்பு – பசுமை நீலகிரி திட்டத்தின் திட்ட இயக்குனரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளருமான கே ஜே ராஜு  சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசும் போது கூறிய கருத்துக்களாவன –

 பூமி இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்வதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள ஒரே கோளாகும்.  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 15 கோடி கிலோமீட்டர் ஆகும். இந்த தூரம் சற்று குறைந்திருந்தாலும் பூமி வெப்ப கோளாகி இருக்கும். கொஞ்சம் அதிகரித்து இருந்தால் பனியால் உறைந்து போயிருக்கும். இந்த வகையில் பூமியை இயற்கை சரியான இடத்தில் வைத்துள்ளது. மேலும் அனைத்து உயிர்களும் வாழும் வகையில் வடிவமைத்துள்ளது. பூமி தனது 460 கோடி வாழ்நாளில் தன்னுடைய சமநிலையை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஐந்து முறை பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பூமி ஆறாவது பேரழிவை நோக்கி செல்கிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள் . மனித குலத்தின் பேராசையால் பூமியின் வளங்கள் சுரண்டப்பட்டு புவி வெப்பமாகி இன்று காலநிலை மாற்றம் என்ற பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பூமியை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மனித குலம் மேற்கொண்டால் ஒழிய இந்த பூமியை காக்க வேறு வழி இல்லை. 2050 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை இரண்டு டிகிரி சென்டி கிரேட் அளவை தாண்டி விடும். அந்த நிலையில் கோதுமை வளர்ச்சி முற்றிலும் அழிந்துவிடும். அரிசி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். மனித குலத்தின் முக்கிய உணவாகிய இந்த தானியங்கள் குறைந்தால் மனிதர்கள் பட்டினியால் சாக வேண்டிய நிலை ஏற்படும். மேலும் புவி வெப்பம் காரணமாக வைரஸ்கள் படையெடுப்பு மிகுதியாகும். இந்த சூழ்நிலையில் பூமியை காக்க மரங்களை நடுவதும் சூரிய, காற்று மற்றும் கடல் அலைகளில் இருந்து மின்னாற்றலை தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். இது குறித்து மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பது போன்ற பல செய்திகளை கூறினார். கோத்தகிரி குடிமக்கள் சங்க செயலர் வழக்கறிஞர் முருகன், அரிமா சங்க நிர்வாகிகள் மோகன் குமார் மற்றும் செயலர்  ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை கூறினார்கள். மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா திரும்ப பெற
மூதாட்டியை புலி தாக்கியதில் உயிரிழந்தார்
மாவட்டத்தில் வீடுகட்ட விரைவான அனுமதி வழங்க வேண்டும்
ஐம்பது வருட அடிப்படை வசதியில்லாத கிராம
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆட்டத்தை தொடங்கிய சசிகலா, கட்சியும் ரெடி: தேர்தல் நிலவரத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்

February 11, 2026
73 Views
மரக்கன்றுகள் நட்டும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் அனுசரிக்கப்பட்டது
அகஸ்தீஸ்வரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு; பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீட்டு மனு கொடுத்தவருக்கு விசாரணை முகாம்!
அம்மன் கோவில் சொக்கலிங்க சுவாமி சூரசம்ஹாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account