காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கற்றல் அடைவுத்திறன் ஆய்வு நடந்தது.
இந்த பள்ளியில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ – மாணவியர் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் எழுதுதல் கணக்கு அடிப்படை செயல்பாடுகளில் கூட்டல்,கழித்தல்,பெருக்கல் மற்றும் வகுத்தல் பாடங்களில் 100 சதவீதம் கற்றல் திறன் கொண்டவர்களாக உள்ளனரா என பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் ஆய்வு செய்தனர். மலையாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் அவர்களால் சான்றிதழ் வழங்கப்பட்டது.



