காஞ்சிபுரம்.
ஏப்ரல்.
10
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சி கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலை களக்காட்டூர் பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர். களக்காட்டூர் ராஜி ஏற்பாட்டில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்,மைதிலி திருநாவுக்கரசு மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் ஆகியோர் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர். மேலும் பொது மக்களுக்கு பழம் ஜூஸ் வெள்ளரி, உள்ளிட்ட பழங்களை வழங்கினர். நிகழ்வில் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்பதி, மாணவரணி செயலாளர் திலக்குமார்,
ஒன்றிய கவுன்சிலர் பேபி சசிகலா ராஜி,ஒன்றிய அவைத் தலைவர் கோலிவாக்கம் ராஜசேகர் உட்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகலா தேவானந்த்,மேத்தா ஞானவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள்
பலர் கலந்து கொண்டனர்.



