காஞ்சிபுரம் ஏப்ரல் 19
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு பல்லவன் நகர், பகுதியில் சேதமடைந்த நிலையில், காலாவதி ஆகி இருந்த அடுக்கு மாடி குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உங்கள் ஊரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சரின், திட்டத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்ட வேண்டும் என காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். எம்எல்ஏவின் கோரிக்கையின் பேரில் உடனடியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர்
மு .க .ஸ்டாலின் உத்திரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் வேலூர் கோட்டம் சார்பில் 60 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12 தளங்களுடன், மூன்று படுக்கையறை கொண்ட 35 வீடுகளும், இரண்டு படுக்கை அறை கொண்ட 48 வீடுகளும், என மொத்தம் 83 உயர் வருவாய் பிரிவு வீடுகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.
விழாவில் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு அடி கல்லை நட்டு வைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை தொடங்கி வைத்து, விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், பகுதி செயலாளர் வெங்கடேசன், திமுக அயலக அணி பி.எம். நீலகண்டன்,கவுன்சிலர் அன்பழகன் மற்றும் வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகளும்,உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



