தேனி
பெரியகுளத்தில் ஆர் பி எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆர் வி எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி பகுதியில் உள்ள விவசாயிகளை சந்தித்து மண்புழு ஓரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இதில் மாணவிகள் விவசாயிகளுக்கு தாங்கள் வீடுகளில் சேகரிக்கும் உணவு கழிவுகள் மற்றும் குப்பைகள் மாட்டு சாணம் ஆகியவற்றை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே சிறிய அளவு தொட்டி மூலம் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பெரியகுளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்மின் அவரது உதவியுடன் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இதன் மூலம் விவசாயிகள் மற்றும் அப்பகுதிப்பது மக்கள் வீட்டில் இருந்தபடி மண்புழு உரம் தயாரித்து தங்கள் விலை நிலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் விற்பனை செய்தும் தங்கள் வருவாயை பெருக்கிக் கொள்ளலாம் என கல்லூரி மாணவிகள் கிராமங்களில் தங்கி விவசாயிகள் சந்தித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இதில் ரஞ்சனி, ரசிகப்பிரியா, ரெனிட்டா ஷாரன், ரோஷினி, செமிதா, ஷீபா, சுபானு ஸ்ரீ ஆகிய மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்



