கிருஷ்ணகிரி, ஏப்.12- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், போச்சம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சந்தூர் பேருந்துகள் நிலையம், போச்சம்பள்ளி பேருந்து நிலையம், அரசம்பட்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா போச்சம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சாந்த மூர்த்தி தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம் எல் ஏ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மாநில விவசாய அணி துணைத்தலைவர் தலைவர் டேம் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன்,புளியம்பட்டி ஆசிரியர் குமார் உள்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.



