கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம் நடைபெற்றது. பர்கூர் வட்டாரத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தினர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாமக மாநில செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு பேசிய போது, கலைஞரின் திமுக ஆட்சி காலத்தில், எந்த இடத்திலும் திராவிட மாடல் ஆட்சி என கூறியது இல்லை, மேலும் மத்திய அரசு வெளியிட்ட கலைஞரின் 100 ரூபாய் நாணயம் அறிவாளயத்தில் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து பெற வேண்டும் என பேசினார். மேலும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது போல், திமுகவும் பாஜகவும் கள்ள உறவு வைத்துள்ளது என்பது எதிர்காலம் தான் முடிவு செய்யும் என பேசினார்.



