கிருஷ்ணகிரி, பிப்ரவரி 19 –
தேமுதிக முதல் முறையாக இந்திய கூட்டணி கட்சியில் இணைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக மற்றும் நகர ஒன்றிய தேமுதிக சார்பில் கிருஷ்ணகிரி ரவுண்டான அருகில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னராஜ், தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர தேமுதிக செயலாளர் ரவி, கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் வேட்டியம்பட்டி முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் மாதேஷ், காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான தேமுதிகவினர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.



