ராமநாதபுரம், ஏப்.10-
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கமுதி கோட்டைமேட்டை சேர்ந்த
கமல், செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் திருவரங்கத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் 3 சக்கர வாகனம் வேண்டி தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் அவர்களிடம் மனு அளித்திருந்தனர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் உடனடியாக பரிந்துரை செய்ததின் பேரில் 09.04.2025 புதன்கிழமை புல்வாய் குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மூன்று பயனாளிகளுக்கும் இலவச மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மற்றும் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனனுக்கும் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் தங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.