தருமபுரி மதிகோண்பாளையம் ராமாக்காள் ஏரிக்கரையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோயில் புரணமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்றது. மேலும் கோயில் வளாகத்தில் முருகன், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேக விழா கொடியேற்றம், கணபதி பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து மதிகோண் பாளையம் சிவன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற ஊர்வலம் கோவிலை அடைந்ததும். கங்கை பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சக்தி விநாயகர்,முருகன், நவக்கிரகம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசம் நிறுவுதல் நடைபெற்றது. யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்திற்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . இதை யடுத்து சக்தி விநாயகருக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது .விழாவில் மதிகோண் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.



