கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ஸ்போர்ட்ஸ் ஷோட்டோகான் கராத்தோ டூ பெடரேஷன், தென்னிந்தியா கராத்தே டூ அசோசியேஷன் மற்றும் சூரிய ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து இளைய தலைமுறையினருக்கு இடையே தற்காப்பு கலையை ஊக்குவிக்கும் வகையில் இலவச கோடைக்கால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இதில் காவேரிப்பட்டிணம், திம்மாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 3 வயது முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவிகள் சுமார் 150 பேர் ஆர்வத்துடன், பயிற்சி முகாமில் கலந்துக் கொண்டனர்.
கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு 6-வது பிளாக் பெல்ட் மலேசியா மாரியப்பன் தலைமையில் துணைப் பயிற்சியாளர்கள் சூர்யா, தங்கம், தம்பிதுரை ஆகியோர் சிறப்பான பயிற்சியினை அளித்தனர். இதில் நாசிக்கு, பையிட்டிங்,
டீ கட்டா, சிலப்பம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பயிற்சிகளை அளித்தனர். ஒரு மாதக் காலம் சிறப்பாக பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பெல்ட் வழங்கும் விழா காவேரிப்பட்டிணத்தில் உள்ள குமார்ஜோதி பள்ளி விளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளியின் தாளாளர் ஆனநதிஜெயபிரகாஷ் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக 8-வது டான் பிளாக் பெல்ட் கிராண்ட் மாஸ்டர் ஹன்சி நடராஜ் கலந்துக்கொண்டு 30 நாள் சிறந்த முறையில் தற்காப்பு கலையை கற்றுக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மஞ்சல், ஆரஞ்ச், பச்சை, நீலம் உள்ளிட்ட பல்வேறு வகையான பெல்ட் மட்டுமின்றி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். அப்போது படிப்பில் மட்டுமே கவனம் இருந்தால் போதாது தற்காப்பு கலைகளிலும் கவனம் செலுத்தி நமது பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விழாவில் பல்வேறு கல்வி நிலையங்களை சேர்ந்த மகேந்திரன், பாலமுருகன், கிருஷ்ணன், காந்தி, ரவிந்தர், முருகேசன், பாலாஜி, ரங்கநாதன், ஸ்ரீரங்கன் உள்ளிட்ட ஏராளமான பெற்றோர்களும் இந்த விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.