நாகர்கோவில் ஏப் 5
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுஜி என்ற பெண் ஒரு பஸ்ஸில் 70 ஆயிரம் பணத்துடன் பயணித்துக் கொண்டிருந்தார்.அவர் ஈத்தாமொழி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது இரண்டு பெண்கள் நைசாக பணத்தை திருடும்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்கள். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆல்வின் என்பவர் கூலி தொழிலாளியாவார். இவருடைய மனைவி சுஜிக்கு 38 வயது ஆகிறது. இவர் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.70 ஆயிரத்து எடுத்துக்கொண்டு ஈத்தாமொழிக்கு அரசு பேருந்தில் புறபட்டார்.ஈத்தாமொழி சென்றதும் சுஜி பேருந்து இருந்து இறங்கி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சுஜியின் அருகில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் நைசாக அவர் வைத்திருந்த பையை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரத்தை திருடினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கவனித்த சுஜி உடனே திருடி திருடி என சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து செயல்பட்டு 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து ஈத்தாமொழி போலீசில் ஒப்படைத்தார்கள்.ஈத்தாமொழி போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாதப்பன் மனைவி வெள்ளச்சி (43), மணி மனைவி ஜோதி (35) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பெண்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தார்கள். அத்துடன் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 2 பெண்களும் வேறு இடங்களில் கைவரிசை காட்டினார்களா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரித்து வருகிறார்கள்.