மார்த்தாண்டம், செப். 1 –
இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடந்தது 125 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் 20 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டது மேலும் வீட்டுப் பிள்ளையார் சிலைகளும் உண்டு. மேல்புறம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 105 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டது. வீட்டுப் பிள்ளையார் சிலைகளும் உண்டு.
குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் மார்த்தாண்டம் பம்மத்திலிருந்து விநாயகர் விசார்ஜன ஊர்வலம் துவங்கி வெட்டுவெந்நி குழித்துறை ஜங்ஷன் வழியாக தாமிரபரணி ஆறு வந்தடைந்தது.
இதைப்போல் மேல்புறம் வட்டார இந்து முன்னணி சார்பில் மேல்புறம் அளப்பங்கோடு கோவிலில் இருந்து ஊர்வலம் துவங்கி வட்டவிளை, கழுவன்திட்டை, குழித்துறை ஜங்ஷன், வெட்டுவெந்நி வழியாக குழித்துறை தாமிரபரணி ஆறு வந்தடைந்தது. பின் பூஜைக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் விசர்சனம் செய்யப்பட்டது.
இதற்கு குழித்துறை நகர இந்து முன்னணி தலைவர் வினுகுமார், மருதன்கோடு பஞ். முன்னாள் தலைவர் சேகர், இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் கங்காதரன், ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், பாரதிய ஜனதா முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட ஆலோசகர் செல்லன், உதவிப் பேராசிரியர் ஸ்ரீதேவி, நகர ஒருங்கிணைப்பாளர் அருண், திருச்செந்தூர் சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ண மந்திரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



