பரமக்குடி,ஏப்.1: பரமக்குடியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் ரம்ஜான் பண்டிகையொட்டி முன்ஏற்பாடுகள் இல்லாமல் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் பிரியாணி கொடுக்காததால் ரகளையில் ஈடுபட்ட பிரியாணி பிரியர்கள். காவல்துறையினர் ஒழுங்குபடுத்தினர்.
ரம்ஜான் பண்டிகை என்றாலே அசைவ உணவில் பிரியாணிக்கு முதலிடம் உண்டு. இஸ்லாமியர்கள் அதிகமாக பிரியாணியை விரும்பி உண்ணுவதால், ஈகைத் திருநாள் அன்று அக்கம் பக்கத்தில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு பிரியாணி கொடுப்பார்கள். இதனால் பிரியாணி கடைகளில் பிரியாணி கிடைக்காது.இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பிரபல பிரியாணி கடைகளில் முன்பதிவுசெய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பரமக்குடி ஆர்ச் பகுதியில் உள்ள பிரபல பிரியாணி கடையில், மூன்று தினங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில், முன்பதிவு செய்தவர்களுக்கு முறையான ஏற்பாடுகளை செய்யாமல், தொடர்ந்து, பிரியாணி வாங்க வருபவர்களிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி வந்தனர். முன்பதிவு செய்தவர்கள் டோக்கன் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பிரியாணி வழங்காததால், பிரியாணி வாங்குவதற்காக முன்பதிவு மற்றும் டோக்கன் பெற்றவர்கள் ரகளை ஈடுபட்டனர். இதனால் பிரியாணி பிரியவர்களுக்கும் கடைக்காரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரியாணி கடைக்கு எதிராக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்து முன் ஏற்பாடு இல்லாமல் முன்பதிவு செய்து பொது மக்களை கூட்டம் கூட்டக்கூடாது என கடைக்காரர்களை எச்சரித்துச் சென்றனர்.
படவிளக்கம்.
பரமக்குடியில் உள்ள பிரபல பிரியாணி கடையில் முன்பதிவு செய்து பிரியாணி வழங்காததால் ரகளை ஈடுபட்ட பிரியாணி பிரியர்கள்.