திருப்புவனம்: மார்ச்:28
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் மு.பறையன்குளம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பாக பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
தலைமை ஆசிரியை மரியஜெஸிந்தா தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுவிழா நிகழ்ச்சியானது பள்ளி மாணவர்களது பல்வேறு கலை
நிகழ்ச்சிகளோடு நடைபெற்றது .இந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர்கள் லதாதேவி,
பால்பாண்டி, வட்டார வளமைய
பயிற்றுனர். சுப்புலெட்சுமி, ஆசிரியர் இராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பாக நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



