சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் என்.என்.605 இடைக்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி இணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



