தென் தாமரை குளம் மார்ச் 25
கன்னியாகுமரி பேரூராட்சியில் மெகா ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து 1-வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சி.எஸ்.சுபாஷ் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.
இதில் 2 ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.10 லட்சம்.
முட்புதர்கள் அகற்ற ரூ.5 லட்சம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் அமைத்து வர்ணம் பூச ரூ.9.80 லட்சம்.
உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்வதில் பேரூராட்சி நிர்வாகம் ஊழல் செய்துள்ளதாகவும்,இதை கேட்டால் செயல் அலுவலர் சரியான பதில் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை தெரிவித்து
கன்னியாகுமரி பேரூராட்சி 1-வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சி.எஸ்.சுபாஷ் வெளிநடப்பு செய்தார்.



