மார்ச் 21 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட “சர்வதேச காடுகள் தினத்தில்” காடுகளின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு வேதியியல் துறை மற்றும் திண்டுக்கல் நேரு யுவ கேந்திர இணைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுபாஷினி தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். கல்லூரி மேலாளர் இரா.கணேசன் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு நேரு யுவ கேந்திர ஒருங்கிணைப்பாளர் கோமதி, வன அதிகாரி ஆறுமுகம்,
தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மர கன்றுகளை வழங்கினார்கள். மேலும் மாணவர்களுக்கு “காடுகளும்- உணவுகளும்” என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் மர கன்றுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை பேராசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.



