கிருஷ்ணகிரி, மார்.17- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெகதேவியில் பர்கூர் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற் குடையை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் அறிஞர், ரஜினி செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ. கே. கிருபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி. நாகராஜ், மாநில விவசாய அணி துணைத் செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எஸ். பாலாஜி,ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ் (எ ) ராஜதுரை மற்றும் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஜெகதேவி ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன் உள்பட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



