By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய மருத்துவர்கள் அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > உலக சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய மருத்துவர்கள் அறிவுரை
மதுரைமாவட்டம்

உலக சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய மருத்துவர்கள் அறிவுரை

Last updated: March 14, 2025 9:13 am
March 14, 2025
62 Views
Share
SHARE

மதுரை மார்ச் 13,

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலக சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய மருத்துவர்கள் அறிவுரை

தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனையான மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறுநீரக ஆரோக்கிய சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாய சமூகங்களை பெரும்பாலும் பாதிக்கும் ஒரு நோயான, காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோயை புரிந்து கொள்வதற்கும், ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளை கண்டறிவதை ஏதுவாக்க கிராம அடிப்படையில் திறன்மிக்க அடிப்படை சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கான அவசரத் தேவை இருப்பதை அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று அனுசரிக்கப்படும் உலக சிறுநீரக தினத்தையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வை இம்மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்தது. சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். சம்பத்குமார், சிறுநீரகப்பாதையியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிர்வாகி டாக்டர். கண்ணன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இது குறித்த தகவல்களையும், தரவுகளையும் பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற மக்கள் தொகையில் 8-19 விழுக்காடுக்கு இடைப்பட்ட நபர்களிடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) காணப்படுவதை ஒரு சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தனர். நச்சுப் பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், மாசுபட்ட நீரை பயன்படுத்துவது மற்றும் வெப்ப அழுத்தம் ஆகியவற்றிற்கு வெளிப்படும் நிலைமையானது கிராமப்புற மக்களின் சிறுநீரக ஆரோக்கியத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அவர்கள் குறிப்பிட்டனர். மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் சம்பத்குமார் கூறியதாவது: வயது வந்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 10-15% நபர்களிடம் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் குடும்பத்தில் இருக்கும் வரலாறு போன்ற காரணிகள் பல நபர்களை இந்நோய் வருவதற்கான ஆபத்தில் வைக்கின்றன” என்று கூறினார். டாக்டர். சம்பத்குமார், “சிறுநீரக நோயானது ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் வெளிப்படுத்தாமல் சத்தமின்றி வளர்ச்சியடையும். எனவே இந்த பாதிப்பு நிலையை திறம்பட நிர்வகிப்பதற்கும் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர சிக்கல்கள் வராமல் தவிர்க்கவும் ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் (அடிப்படை நோய் கண்டறிதல்) சோதனையை செய்வது இன்றியமையாதது. ஒரு இரத்தப்பரிசோதனையானது, குறிப்பாக Serum Creatinine, சிறுநீரக செயல்பாட்டின் ஒரு முக்கிய அளவிலான Glomerular filtration rate (GFR) என்பதனை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது” என்று கூறினார். மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறுநீரகப்பாதையியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர்.R. ரவிச்சந்திரன் கூறுகையில்
இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக முக்கியமானது. நீரிழிவு நோயாளிகள், அவர்களின் HbA1c அளவை 7% குறைவாக வைத்திருக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தமுள்ள நபர்கள்,அவர்களது இரத்த அழுத்தத்தை 130/80-க்குள் வைத்திருப்பதை தங்களது இலக்காக கொண்டிருக்க வேண்டும். புகை பிடிப்பதையும், அளவுக்கதிகமாக மதுபானம் அருந்துவதையும் தவிர்ப்பது சமஅளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், சிறுநீரகம் சேதம் அடைவதற்கு இந்த தவறான பழக்கங்கள் பங்களிப்பு செய்யக்கூடியவை.கூடுதலாக, குறைந்தது ஏழு மணி நேரம் நன்கு உறங்குவதும், மற்றும் முறையான ஓய்வு எடுப்பதும் இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரு முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” என்று குறிப்பிட்டார்

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
காரமடை நகர திமுக சார்பில் 4வது வார்டு பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா
கோவையில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா செய்தியாளர் சந்திப்பு
பிரபல வழக்கறிஞர் ஜானகிராமன் நியமனம்
இந்திய கிரிக்கெட் அணியில் திருச்சி வீரர் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை அடைக்க கோசாலை, நாய்களுக்கு கருத்தடை; மாநகராட்சி கூட்டத்தில் மேயர் தகவல்

November 25, 2025
70 Views
கட்டுமான பொருட்களுக்கு தடை; சித்திரங்கோட்டில் பாஜக போராட்டம்; எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது
வலையபட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு
தொழிலதிபர் தணிகாசலம் தாயார் மறைவு
குடிநீர் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account