மதுரை மார்ச் 13,
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலக சிறுநீரக ஆரோக்கியம் பற்றிய மருத்துவர்கள் அறிவுரை
தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனையான மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறுநீரக ஆரோக்கிய சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாய சமூகங்களை பெரும்பாலும் பாதிக்கும் ஒரு நோயான, காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோயை புரிந்து கொள்வதற்கும், ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளை கண்டறிவதை ஏதுவாக்க கிராம அடிப்படையில் திறன்மிக்க அடிப்படை சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கான அவசரத் தேவை இருப்பதை அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டி இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13 அன்று அனுசரிக்கப்படும் உலக சிறுநீரக தினத்தையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வை இம்மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்தது. சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். சம்பத்குமார், சிறுநீரகப்பாதையியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிர்வாகி டாக்டர். கண்ணன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இது குறித்த தகவல்களையும், தரவுகளையும் பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாடு மாநிலத்தின் கிராமப்புற மக்கள் தொகையில் 8-19 விழுக்காடுக்கு இடைப்பட்ட நபர்களிடையே காரணம் அறியப்படாத நாள்பட்ட சிறுநீரக நோய் (CKDu) காணப்படுவதை ஒரு சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தனர். நச்சுப் பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், மாசுபட்ட நீரை பயன்படுத்துவது மற்றும் வெப்ப அழுத்தம் ஆகியவற்றிற்கு வெளிப்படும் நிலைமையானது கிராமப்புற மக்களின் சிறுநீரக ஆரோக்கியத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று அவர்கள் குறிப்பிட்டனர். மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் சம்பத்குமார் கூறியதாவது: வயது வந்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 10-15% நபர்களிடம் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன.நீரிழிவு, அதிக இரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் குடும்பத்தில் இருக்கும் வரலாறு போன்ற காரணிகள் பல நபர்களை இந்நோய் வருவதற்கான ஆபத்தில் வைக்கின்றன” என்று கூறினார். டாக்டர். சம்பத்குமார், “சிறுநீரக நோயானது ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் வெளிப்படுத்தாமல் சத்தமின்றி வளர்ச்சியடையும். எனவே இந்த பாதிப்பு நிலையை திறம்பட நிர்வகிப்பதற்கும் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர சிக்கல்கள் வராமல் தவிர்க்கவும் ஆரம்ப நிலையிலேயே ஸ்கிரீனிங் (அடிப்படை நோய் கண்டறிதல்) சோதனையை செய்வது இன்றியமையாதது. ஒரு இரத்தப்பரிசோதனையானது, குறிப்பாக Serum Creatinine, சிறுநீரக செயல்பாட்டின் ஒரு முக்கிய அளவிலான Glomerular filtration rate (GFR) என்பதனை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது” என்று கூறினார். மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறுநீரகப்பாதையியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர்.R. ரவிச்சந்திரன் கூறுகையில்
இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக முக்கியமானது. நீரிழிவு நோயாளிகள், அவர்களின் HbA1c அளவை 7% குறைவாக வைத்திருக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தமுள்ள நபர்கள்,அவர்களது இரத்த அழுத்தத்தை 130/80-க்குள் வைத்திருப்பதை தங்களது இலக்காக கொண்டிருக்க வேண்டும். புகை பிடிப்பதையும், அளவுக்கதிகமாக மதுபானம் அருந்துவதையும் தவிர்ப்பது சமஅளவு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், சிறுநீரகம் சேதம் அடைவதற்கு இந்த தவறான பழக்கங்கள் பங்களிப்பு செய்யக்கூடியவை.கூடுதலாக, குறைந்தது ஏழு மணி நேரம் நன்கு உறங்குவதும், மற்றும் முறையான ஓய்வு எடுப்பதும் இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகிய இரு முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” என்று குறிப்பிட்டார்