அஞ்சுகிராமம் மார்ச் – 9
அஞ்சுகிராமம் பேரூராட்சி 11-வது வார்டு கவுன்சிலரும், இயற்கை ஆர்வலருமான ஜோஸ் திவாகர்.தமிழக நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஜல்-ஜீவன் திட்டத்தையும், அம்ரூத் 2.0 என்று தமிழக அரசும் திட்டங்கள் வகுத்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஒப்பந்தகாரர்கள் பணிகளை எடுத்து, சரிவர துரிதமாக பணிகளை செய்யாமல் மந்தநிலையில் பணி செய்து வருகிறார்கள். கடந்த 2023-டிசம்பர் மாதம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் பணிகள் ஒதுக்கப்பட்டு, 2024 டிசம்பருக்குள் பணிகள் முடிக்க தீர்மாணிக்கப்பட்டு, ஆனால் பணிகள் முடிவடையாதலால் கூடுதல் மூன்று மாதங்கள் ஒதுக்கப்பட்டது, இருந்தபோதிலும் 75% பணிகள் முடிவடையாமல் ஒப்பந்தகாரர்களுக்கும், பணியாளர்களுக்கும் கருத்துவேறுபாட்டால் பணிகள் தோய்வு நிலையில் உள்ளது. மேலும் புதிய குடிநீர் இணைப்புக்காக பணம் கட்டி ஒரு வருடமாக காத்திருப்போர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர் மேலும் குடிநீர் இணைப்புக்காக செண்பகராமபுரம், ஜேம்ஸ்டவுன் பகுதிகளில் பல லட்சம் செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க பணிகள் தொடங்கி முடிவடையாமல், காட்சி கோபுரமாக உள்ளது மேலும் குடிநீர் இணைப்புக்காக அனைத்து வார்டுகளிலும் உள்ள, காங்கீரிட், பேவர்பிளாக் ஒடுகளை அகற்றியும், கிராம சாலைகள், தேசிய சாலைகளை தோண்டி ஆள் உயர குண்டுகளை தோண்டி முடாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் மற்றும் டூவீலரில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே புதிய குடிநீர் இணைப்புக்காக பணம் கட்டி காத்திருப்போருக்கு இந்த கோடையிலாவது தாகத்திற்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற அரச அதிகாரிகளை முடுக்கிவிட வேண்டுமென இயற்கை ஆர்வலரும்,அஞ்சுகிராமம் பேரூராட்சி 11-வது வார்டு கவுண்சிலருமான ஜோஸ் திவாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.



