ஊட்டி. பிப். 28.
நீலகிரி மாவட்ட சேர்மனாக பதவி வகித்த நீலகிரி மாவட்ட கோடநாடு சேர்ந்த பொந்தோஸ் தற்போது தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணைய உறுப்பினராக தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்டத்தில் உள்ள ஆறு முக்கிய பழங்குடி சமூகத்தில் தோடர் சமுதாயத்தை சார்ந்தவராவார். இவர் கோத்தகிரி கோடநாடு பகுதியில் வசிக்கிறார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசின் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வளர்ச்சிக்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்திவரும் கோடநாடு பொந்தோஸ் அவர்களை தமிழக அரசால் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பழங்குடியினர் சங்கங்கள், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையினர், வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆணைய உறுப்பினராக பதவி ஏற்ற பின் தமிழக முதல்வர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.