இராமேஸ்வரம், செப். 16 –
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து நான்கு மின்சார ரயில்கள் தொடங்குகியது.
நாடு முழுவதிலும் ரயில்வே துறையில் டீசல் இஞ்ஜின்கனின் பயன்பாடு மாற்றப்பட்டு மின்சாரத்தில் இயக்கப்படும் ரயில் இஞ்ஜின் சேவை மாற்றம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையில் மின்மயமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதில் மதுரை ராமநாதபுரம் மின்மயமாக்கும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. பாம்பன் புதிய ரயில் பாலம் பணி நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான ரயில் பாதை தற்போது மின்மயமாக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரையில் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கப் பாதையில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு ரயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ் தலைமையில் பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். விரைவில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார இஞ்ஜின் பொருத்தப்பட்டு ரயில் சேவை தொடக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



